• Apr 20 2024

நடிகை சினேகாவின் தந்தையை பார்த்துள்ளீர்களா..குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்பி வருகின்றனர்.


அதுமட்டுமல்லாமல் "இங்கே ஒரு நீலப்பக்சி" என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் "என்னவளே" திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மேலும் சினேகா மும்பையில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார்.


அதுமட்டுமல்லாமல் மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து மிகவும் பிரபலமானார். இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது 


மேலும்  பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்  தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.


தற்போது சினேகா தனது கணவர், பிள்ளைகள், தந்தை மற்றும் அக்காவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்...


Advertisement

Advertisement

Advertisement