• Apr 20 2024

மாடு வாங்கியிருக்காரா மா.க.பா.ஆனந்த்..?என்னப்பா ஆளாளுக்கு மாடு வாங்கிறீங்க..! விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர்களில் ஒருவர் மா.கா.பா ஆனந்த். இவர் நடிகராக மட்டுமல்லாது பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். எனினும் இவர் ஆரம்பத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி இருக்கின்றார்.

எனினும் மக்கள் மத்தியில் இவருக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் தொலைக்காட்சியே. இதில் இவர் தொகுத்து வழங்கிய 'சூப்பர் சிங்கர், அது இது எது, சினிமா காரம் காபி' போன்ற நிகழ்ச்சிகள் ஏராளமான ரசிகர் கூட்டத்தை இவருக்கு பெற்றுக் கொடுத்திருந்தது.

சின்னத்திரையில் கொடி கட்டிப் பறந்து வந்த இவர் பெரிய திரையிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அதாவது 2014-ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து 'வானவராயன் வல்லவராயன்' என்ற படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக சின்னத்திரை, பெரியதிரை என பிஸியாக இருந்ததை வரும் மா.கா.பா ஆனந்த் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். அந்த வகையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதில் இவருடன் இணைந்து முக்குத்தி வேலனும் இவ் வீடியோவில் இடம்பெற்று இருக்கின்றார்.

அதாவது அவ்வீடியோவில் மா.கா.பா "மாடு வாங்கியிருக்கோம், அதை மேய்க்கிறதற்காக இவரை வாங்கியிருக்கோம்" எனக் காமெடியாக கூறியிருக்கின்றார். அதாவது மூக்குத்திப் வேலனை சுட்டிக் காட்டி இவரை தான் மாடு மேய்க்க வாங்கியிருக்கோம் எனக் கூறியிருக்கார்.

சமீபத்தில் பிக்பாஸ் பாலா கார் வாங்கியதை "மாடு வாங்கியிருக்கோம்" என்று சொல்லி பதிவிட்டிருந்தமை பரவலாக பலராலும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மா.கா.பா ஆனந்தும் இவ்வாறு பதிவிட்டிருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றார்கள். அதுமட்டுமன்றி அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டும் வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement