• Apr 19 2024

இலங்கை வந்துவிட்டாரா ஜனனி...கேள்வி கேட்கும் ரசிகர்கள்...தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  போட்டியாளர் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.


பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், ஓவர் பில்டப் கொடுத்து, சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும்  பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் இலங்கையில் எடுத்த மாதிரி உள்ளது.அதைப் பார்த்த ரசிகர்கள் இலங்கை வந்து விட்டீர்களா..? என்று கேட்டு உள்ளார்கள்.



Advertisement

Advertisement

Advertisement