• Apr 19 2024

பாக்கியாவின் அழகில் மயங்கிப் போன கோபி- ராதிகாவை நக்கலாகப் பேசிய செல்வி- இனியா கொடுத்த பதிலடி

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம். போதையில் வந்த கோபி ஜெனகிட்ட பேசிட்டு இருக்கும் போது பாக்கியா வருகின்றார். பாக்கியா சல்வார் போட்டிருப்பதைப் பார்த்த கோபி ஜெனியிடம் உன்னோட ப்ரண்ட் யாரோ வந்திருக்கிறாங்க போய் பார் என்று சொல்கின்றார். 

ஜெனியும் போய் பார்த்து பேச பாக்கியா ஜெனியிடம் மாத்திரை சாப்பிட்டியா யூஸ் குடிச்சியா என விசாரிக்க கோபி அதிர்ச்சியடைகின்றார்.பின்னர் பாக்கியா அங்கிருந்து கிளம்ப கோபி டிவொஸ் கொடுத்தா நான் சந்தோஷமாக இருப்பேன் என்று பார்த்தால் நீ ஜாலியாக இருக்கிறாய் நீயாவது சந்தோசமாக இரு நான் இப்படியே புலம்பிட்டு இருக்கிறேன் என்று கூறுகின்றார்.


பின்னர் பாக்கியா ஜெனிக்காக சாப்பாடு செய்து கொண்டே செல்விகிட்டையும் ஜெனிகிட்டையும் ஜாலியாக பேசிட்டு இருக்கும் போது ராதிகா அங்கு வந்து சமைக்கிறார். இதனால் செல்வி ஈஸ்வரியைக் கூட்டிக் கொண்டு வந்து காட்ட ராதிகா ஈஸ்வரியை வெறுப்பேற்றுகின்றார். இதனால் அங்கிருந்து கிளம்பிய பாக்கியா ஜெனியுடன் சேர்ந்து டிவி பார்க்கின்றார்.

தொடர்ந்து கோபி இருக்கும் ரூமுக்குள் புக் எடுக்கச் சென்ற இனியாவிடம் கோபி உனக்கு ரெஸ் வாங்கித் தரணும் போன் வாங்கிச் தரணும் எவ்வளவு நாள் ஆச்சு நாம ரெண்டு பேரும் வெளில போய் எனச் சொல்ல இனியா அதெல்லாம் ஒன்றும் வேணாம் டாடி என்று சொல்கின்றார். பின்னர் ராதிகாவைக் கண்டதும் கட்டாயம் போகலாம் டாடி என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகின்றார்.


இதைப்பார்த்த ராதிகா கடுப்பாகி கோபியை திட்டி விட்டு தான் கொண்டு வந்த சப்பாத்தியைக் கொடுக்கின்றார். கோபி அதை நீயே ஊட்டி வடு என் சொல்லி ஏதோ பிடிச்சு சாப்பிடுவதைப் போல சாப்பிடுகின்றார். பின்னர் இரவு எல்லோரும் துாங்கி விட ராதிகா துாங்காமல் மயூ பற்றி யோசிச்சு கவலைப்படுகின்றார்.

இதனால் பேசாம நாம அந்த வீட்டுக்கே போய்டலாம் இங்க இருந்தால் எல்லாருக்குமே கஷ்டம் எனச் சொல்ல ராதிகா ,கோபி தன்னை இந்த வீட்டை விட்டு துரத்துவதாக எண்ணி திட்டுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement