• Apr 23 2024

ராதிகாவை தாறுமாறாக பேசிய கோபி..தாத்தா வெளியே போனதும் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி... இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்..

கோபி மற்றும் ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட கோபி உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது நீ பைத்தியக்காரனாக்கிடுவ என கோபப்படுகிறார்.

அத்தோடு  கோபி மயூவை இங்கேயே கூட்டி வந்துவிடலாம் போதுமா என சொல்ல நான் வந்து கஷ்டப்படுறது போதாதா? அவளும் கஷ்டப்படணுமா என கூறுகிறார். ராதிகா உங்களுக்காக நிறைய சாக்கிரைஸ் பண்ணி இருக்கேன் என சொல்ல கோபி நானும் தான் உனக்காக என்னுடைய மொத்த குடும்பத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக ராதிகா எழுந்து வெளியே வருகிறார்.



அதனைத் தொடர்ந்து செல்வி மற்றும் பாக்யா இருவரும் கிச்சனில் இருக்க பாக்கியா லேட் ஆயிடுச்சு இன்னைக்கு நைட்டு இங்கேயே இருந்துடு என கூற செல்வி இல்லக்கா நான் வீட்டுக்கு போறேன் என கூறுகிறார். கோபி ராதிகா பற்றி பேச பாக்கியா அது பத்தி எல்லாம் யோசிச்சா வேலை செய்ய முடியாது, மூலையில ஒக்காந்து விடுவோம் எதை பத்தியும் கவலைப்படாம போய்கிட்டே இருக்கணும் என சொல்கிறார்.

இதன் பின்னர்  செல்வி கிளம்பியதும் பாக்யா கதவை சாத்திவிட்டு உள்ளே வர ராதிகா கீழே இறங்கி வர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அதன் பிறகு மறுநாள் காலையில் பாக்யா, அமிர்தா மற்றும் செல்வி என மூவரும் கேண்டீன் கிளம்புகின்றனர். ஈஸ்வரி கோவிலுக்கு கிளம்பிச் செல்ல தாத்தா ராமமூர்த்தி நிலா பாப்பாவை கொஞ்சி கொண்டு இருக்கிறார்.

நிலா பாப்பா வெளியே பார்க்குக்கு போக வேண்டும் என சொல்ல ராமமூர்த்தி அவரை கூட்டி செல்ல ரெடியாக ஜெனி நிலாவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க அது தவறி கீழே கொட்டி விடுகிறது. பின்னர்  ராமமூர்த்தி நான் வெளியே ஏதாவது வாங்கி கொடுத்துகிறேன் என பாப்பாவை தூக்கிக் கொண்டு கிளம்பி விட அவர்கள் சென்ற பிறகு ஜெனி கீழே கொட்டிய பாலால் வழுக்கி கீழே விழுகிறார். பிறகு தட்டி தடுமாறி எழுந்து படிக்கட்டில் அமர்ந்து கண்கலங்குகிறார்.

இங்கே செழியன் கிளைன்ட் மாலினியை சந்திக்க வர அவர் ப்ராஜெக்ட் பத்தி இப்பவே எதுக்கு பேசணும் இன்னும் நாலைந்து வருடம் உங்களோடு தான் டிராவல் பண்ண போறேன் நம்பள பத்தி பேசி தெரிந்து கொள்ளலாம் என சொல்லி உங்களுக்கு கல்யாணம் ஆனதை கேட்டா அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கு என சொல்ல செழியன் ஏன் எனக் கேட்க இந்த மாதிரி பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா நாங்க என்ன பண்றது என பேசுகிறார்.

அத்தோடு வீட்டில் ஜெனி இந்த நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்றாங்க, ஆனா நான் கீழே விழுந்துட்டேன் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement