• Apr 19 2024

காரினால் மோதச் சென்ற பாக்கியா.. பயத்தில் ஓடித் தப்பிய கோபி.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் தொடர்ந்தும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதில் பாக்கியா இங்கிலீஸ் கிளாஸ் ஒன்றில் சேர்ந்திருக்கின்றார். அதே கிளாசில் பழனிச்சாமியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் கார் குறுக்கே நிற்கின்றது. எதிரே வந்த வண்டியின் ஓட்டுநர் கார் குறுக்கே நிற்பதாகவும் அதனை எடுத்தால் தான் வண்டியை அங்கே நிறுத்த முடியும் எனவும் கூறுகின்றார். இவை அனைத்தையும் கோபி அருகில் நின்று கண்டும் காணாதது போல் பார்த்த வண்ணம் இருக்கின்றார்.


இதனையடுத்து பாக்கியா "நான் எடுத்து விடவா" என எழிலிடம் கேட்கின்றார். அதற்கு அவர் "நீயா அம்மா" என அதிர்ச்சியுடன் கேட்கின்றார். எனக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்ததே நீ தானே எனக் கூறி விட்டு பாக்கியா காரை எடுத்து விட செல்கின்றார். இதனைப் பார்த்ததும் கோபி அதிர்ச்சியடைகின்றார்.


பின்பு காரில் ஏறிய பாக்கியா வண்டியை ஓட்டுகின்றார். வேண்டுமென்றே கோபி குறுக்கே நின்றதைப் பார்த்து விட்டும் கவனிக்காதது போல் காரினால் மோத செல்கின்றார். அதற்கு கோபி சற்று பயப்பிடுவது போல் பயந்து விட்டு ஓரமாக தள்ளி நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement