• Apr 19 2024

அமிர்தாவின் பிள்ளையை தூக்கிக் கொஞ்சிய கோபி- எழிலுடன் சமாதானம் ஆகி விட்டாரா?- வைரலாகும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் இல்லத்தரிசிகளைக் கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தான் பாக்கியலட்சுமி சீரியல்.கோபியைப் பிரிந்ததில் இருந்து பாக்கியா தன்னுடைய முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

இது ஒரு புறம் இருக்க கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்து வருகின்றார்.அந்த வகையில் அண்மையில் இரண்டு லட்சம் பணத்தை கொடுத்து கோபியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


அதனை அடுத்து ராதிகாவின் கண்டீன் ஆடரை மீண்டும் எடுத்து விட்டார். இதனால் ஒரே ஆபீஸில் இருவரும் வேலை செய்வதால் இருவரும் எப்படியெல்லாம் முட்டிக் கொள்ளப் போகின்றார்கள் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் கோபி அமிர்தாவின் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சுவது போல புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement