• Apr 20 2024

இனியாவை வைத்து கோபி போடும் புதிய பிளான்- எழிலை கட்டாயப்படுத்தும் ஈஸ்வரி- ஜெனியிடம் சிக்கிய செழியன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் மற்றும் ஈஸ்வரி என இருவரும் வர்ஷினியின் அப்பாவை பார்த்து பேசுகின்றனர். ஈஸ்வரி கண்டிப்பா எழில் வர்ஷினியை கல்யாணம் பண்ணிப்பான் இந்த பண பிரச்சனையை வைத்து கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை நான் பண்றேன் என வாக்கு கொடுக்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் ஈஸ்வரி எழிலைக் கூப்பிட்டு வர்சினியை கல்யாணம் பண்ணிக்க அவர் பணம் கொடுப்பதா சொல்லி இருக்கார் என சொல்ல எழில் முடியாது என மறுக்க நீ இதை பண்ணித்தான் ஆகணும் இல்லனா இந்த குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என சொல்கிறார். அப்படி எதுவும் நான் நடக்க விடமாட்டேன் அதுக்காக வர்ஷினிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு எழில் அங்கிருந்து கிளம்ப ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.


அடுத்து எழில் பாக்யாவுக்கு போன் செய்து எல்லா பிரச்சனையும் என்னால தான் என மன்னிப்பு கேட்க பாக்யா ஆறுதல் கூறுகிறார். அடுத்து கோபி இனியாவை வைத்து ராமமூர்த்திக்கு போன் போட்டு விஷயத்தை வாங்க முயற்சி செய்கிறார். ராமமூர்த்தியும் உன்னுடைய சின்ன தாத்தா ஒருவர் ஒரு ஆள சொல்லியிருக்கிறார் அவர் தான் சொத்துக்களை வாங்கி சொல்லிருக்காரு ரெண்டு நாள்ல அட்வான்ஸ் கொடுத்துருவாறு மூணு வாரம் கழிச்சு ரிஜிஸ்ட்ரேஷன் என சொல்ல கோபி அதை வைத்து ஒரு திட்டம் தீட்டுகிறார்.


அடுத்ததாக ஜெனி செழியனிடம் நீயும் பாட்டியும் எழிலிடம் பேசுவதை பார்த்தேன். பணத்திற்காக வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க சொல்றது நல்லா இல்ல என சொல்ல செழியன் ஜெனியிடம் சண்டை போட்டு வெளியே வந்து விடுகிறான்.அடுத்து பாக்கியா ராமமூர்த்தியிடம் இனியா பத்தி பேச அப்போது இனியா போன் செய்து விசாரித்த விஷயத்தை சொல்கிறார். எனக்கு என்ன கோபி பக்கத்துல இருந்து கேட்டா மாதிரி இருக்கு என சொல்ல அவர் உங்க மேல பாசம் அதிகம் அவருக்கு என்னை மட்டும்தான் பிடிக்காது என சொல்கிறார். மேலும் பாக்கியா அவருக்கு நீங்க என்ன கல்யாணம் பண்ணி வச்சிருக்க கூடாது மாமா என சொல்ல ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement