• Apr 19 2024

எனக்கு கொஞ்சம் சிறுநீர் தாருங்கள்- தமிழைக் கொன்ற ரச்சிதா- மோசமாக கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த வாரம் முழுக்க பேக்கிரி டாஸ்க் மூலம் ஸ்வீட் செய்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி உள்ளது. 

இந்த அரண்மனை டாஸ்கில் தற்போது ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும் மந்திரியாக விக்ரமனும், படைத்தளபதியாக அசீமும், உள்ளனர்.இந்த டாஸ்கில் அவ்வப்போது ராணியாக இருக்கும் ரக்ஷிதாவிடம் தன்னுடைய ரொமான்ஸ் லீலையை காட்டி வரும் ராபர்ட் மாஸ்டர், நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார். 


இது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் ரச்சிதாவுக்கு ஷிவின் சாப்பாட்டிற்குள் உப்புப் போட்டுக் கொடுத்தார். இதனால் அசீம் ஒழுங்காகக் கவனிக்காதது தான் காரணம் என்று ஷிவின் குற்றம் சாட்டியதால் அனைவரும் அசீமுக்கு எதிராக திரும்பி சண்டை பிடித்தனர்.

இதனை அடுத்து கோபமான ரச்சிதா பெட்ரூமுக்குள் போயிருக்கின்றார்.அத்தோடு ராஜா எனக்கு சிறுநீர் கொண்டு வாருங்கள் என்று ராபேட் மாஸ்டரிடம் கேட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னது சிறு நீரா இவர் தண்ணீர் வேண்டும் என்று கேட்கின்றாரா அல்லது யூரின் வேணும் என்று கேட்கிறாரா எனக் குழம்பிப்போய் கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement