• Sep 30 2024

நிச்சயதார்த்த விழாவில் ஜோடியாக கலந்து கொண்ட கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்..வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் கார்த்திக் இருவரும் ஒன்றாக இணைந்து நிச்சயதார்த்த விழாவில் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, 'கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக, தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கெளதம் கார்த்திக் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க போராடி வருகிறார். 

மேலும் ஒரு கட்டத்தில் அடல்ட் பட நாயகன் என பெயர் எடுத்த இவர், தற்போது அது போன்ற கதைகள் வந்தால், நிராகரித்து விட்டு தரமான கதையில் நடிக்க வேண்டுமென நிறுத்தி, நிதனமாக கதை தேர்வு செய்து  தற்போது நடித்து வருகிறார்.

ஏற்கனவே பிரியா ஆனந்தின் காதல் கிசுகிசுவில் சிக்கிய கெளதம் கார்த்திக், சமீபத்தில் வெளியான 'தேவராட்டம்' படத்தில் நடித்த போது, இவருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக  நடித்த மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக சொல்லப்பட்டது.இதுகுறித்து கெளதம் கார்த்திக் வாய் திறக்காத நிலையில், மஞ்சிமா மோகன் மட்டுமே விளக்கம் கொடுத்திருந்தார்.



அத்தோடு தனக்கும் கெளதம் கார்த்திக்கும் இடையே உள்ள காதல் கிசுகிசு முழுக்க முழுக்க வதந்தி என்றும் தன்னுடைய பெற்றோர் இந்த வதந்தியால் மிகவும் மனமுடைந்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.



எனவே இது வதந்தி என கூறப்பட்ட நிலையில், தற்போது மஞ்சிமா மோகன் கெளதம் கார்த்தியுடன் ஜோடியாக  திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட புகைப்படம்  சோசியில் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது கெளதம் கார்த்தியின் நண்பர், கோபி என்பவற்றின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தான் இவர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.



 எனவே மீண்டும் இவர்கள் இருவர் குறித்து, பரவி வந்த காதல் வதந்தி அந்த தகவலை உறுதி செய்வது போல் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்க்கு மஞ்சிமா மோகன் என்ன விளக்கம் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 


Advertisement

Advertisement