• Apr 25 2024

17 வயதில் நான்காவது மனைவி..18 வயதில் மகன்..திசைமாறிப்போன நடிகையின் வாழ்க்கை!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பல பேர் குழந்தை நட்சத்திரமாக கலக்கி இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் நடிகர் மற்றும் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள்.அந்த வகையில் அஞ்சு என்ற நடிகையை யாரும் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது என்று  தான் கூற வேண்டும்.இவர் தனது ஒன்றரை வயதில் இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் நடிக்க வந்தவர். 



அதன் பிறகு தனது 6வயதில்  கதாநாயகியாக கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் ராதிகாவுடன் சேர்ந்து  நடித்தார். மேலும் இவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த காலகட்டம் அது. இவர் சிறந்த நடிகையாக கேரளாவில் சிறப்பு விருது வாங்கியவர். அனைத்து திரைப்படங்களிலும் எதார்த்தமான நடிப்பை வழங்கக் கூடியவர்.

மேலும் இவருக்கும் அந்த காலகட்டத்தில் கிசுகிசுக்கள் மற்றும் #MeeTo போன்ற பிரச்சனைகள் அப்போதே இருந்து வந்ததுள்ளது.அப் படப்பிடிப்பு தளத்தில் இரவு நேரங்களில் இவர் கதவை தட்டுவது இவரை தவறாக பேசுவது, தவறான எண்ணத்தில் கூப்பிடுவது என்று பல கஷ்டங்களுக்கு ஆளாகி உள்ளார். ஆனால் இவருக்கு துணையாக இவரது அப்பாவும் 2 அண்ணன்களும் இருந்ததால் அதில் சிக்காமல் தப்பித்தார்.



தனது 17வது வயதில் கன்னட  நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து வந்தார் அவரது வயது அஞ்சுவின் அப்பாவை விட வயது அதிகம் வீட்டில் சண்டை போட்டு எப்படியோ திருமணம் செய்து கொண்டார். பிரபாகரனுக்கு ஒரு மனைவி ஒரு குழந்தை அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள இவர் திருமணம் செய்துகொண்டார்.ஆனால் திருமணம் ஆன பின்னர் அவரது வீட்டில்  அதிக வயதில் மகன்கள் இருந்ததாக கூறப்படுகிறது .அப்போதுதான் அவருக்கு தெரியும் பிரபாகரனுக்கு அஞ்சு 4 மனைவி என்று வேறு வழியில்லாமல் வாழ்ந்து வந்தார். அத்தோடு மகன் பிறந்து மூன்றாவது வயதில் விவாகரத்து பெற்று தனியாக சென்று விட்டார்.

இதன் பின்னர் வேறு திருமணம் செய்யாமல் தன் குழந்தைக்காக தனியாக வாழ்ந்து அந்த குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வந்தார். இதன் பின்னர் பிரபாகரன் இறந்ததை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று அவரே கூறியிருக்கிறார். இப்பொழுது அந்த ஆண் குழந்தைக்கு 18 வயதாகிறது. தற்போது அஞ்சுவை மகன் பார்த்துக் கொள்கிறார்.

மேலும்  இவரைப் போன்று பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக மாறி தற்போது மிகப்பெரிய இடத்தில் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அஞ்சுவிற்கு  சரியான திருமணம் வாழ்க்கை அமையாததால் இவரது வாழ்க்கையும் மற்றும் சினிமா வாழ்க்கையும் சரியான முறையில் அமையவில்லை இன்றுவரை கஷ்டப்பட்டு எப்படியோ வாழ்ந்து வருகிறார். அத்தோடு ஒரு பெரிய நடிகைக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இன்று வரை இருந்து வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement