• Apr 19 2024

ஒரே வீட்டில் நான்கு தமிழ்நடிகைகள்... தமிழ் சினிமாவை தம் வசப்படுத்தியவர்கள் இவர்கள் தானா..?

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை லட்சுமி மற்றும் குடும்பத்தினர் தமிழ் சினிமாவில் 80 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகிகளாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இது ஒரு ஆச்சரியமான விஷயம் தான். நடிகை ருக்மணி இவருடைய அம்மா தான். தமிழ் சினிமாவில் இரண்டு ருக்மணிகள் இருக்கின்றார்கள். 


அவர்களில் ஒருவர் ஆர்கே ருக்மணி மற்றவர்  குமாரி ருக்மணி. குமாரி ருக்மணி பாரிஸ் பியூட்டி என அழைக்கப்பட்டவர். இவர் தமிழ் சினிமாவில் 30களின் இருந்து 70களின் இறுதி வரையில் சிறந்த நடிகையாக இருந்தவர். 


குமாரி ருக்மணியின் தாய் ஜானகி அவரும் ஒரு நடிகை தான். இந்நிலையில் மும்பையில் ஹரிச்சந்திரா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்திருக்கிறது. இந்த நேரத்தில் இப்படத்தில் பால்யகால லோகிதாசனாக நடிக்க சரியான குழந்தை நட்சத்திரத்தை படக்குழுவினர் தேடுகையில் இப்படத்தின் கதாநாயகி ராஜலட்சிமி தன்னுடைய அறைக்கு அருகே உள்ள ஒரு அறையில் ருக்மணி தங்கியிருந்ததை பார்த்துள்ளார். 


நடிகை ருக்மணியின் சுட்டித்தனமாக விளையாடும் அழகு டி.பி.ராஜலட்சிமிக்கு பிடித்துப்போகவே அவரை குழந்தை நட்சத்திரமாக ஹரிச்சந்திரா படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இயங்குநரிடம் கூறியுள்ளார். ருக்மணியின் தாயிடம் சம்மதத்தை பெற்றவுடன் ருக்மணியை சிறிய வயது லோகிதாசனாக நடிக்க வைத்துள்ளனர்.


இந்த படத்திற்கு பிறகு பாலயோகினி, தேச முன்னேற்றம், சிந்தாமணி, ரிஷியசிருங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து விட்டார். இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ருக்மணி ஸ்ரீவள்ளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக கதாநாயகியாக நடித்தார்.


இவருக்கும் இயக்குநர் ஒய்.வி.ராவ்கும் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து இந்த தம்பதிக்கு பிறந்த மகள் தான் நடிகை லட்சுமி. இவர் தன்னுடைய தாயை விட மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் எம்.ஜி ஆர், சிவாஜி, சிவகுமார், ஜெய்சங்கர் என அப்போதைய முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட்டார்.


மேலும் இந்நிலையில் இவரது மகள் ஐஸ்வர்யாவும் தமிழ் சினிமாவில் நடிகையாக இருக்கிறார். ஆனால் தன்னுடைய அம்மா மற்றும் பாட்டி அளவிற்கு பிரபலமாகவில்லை. இப்படி ஒரு குடும்பமே பல நடிகைகளை தந்திருக்கிறது.




Advertisement

Advertisement

Advertisement