• Apr 25 2024

இந்த ஒரு காரணத்துக்காக எனக்கு ஆண் குழந்தை தான் வேணும்-அழுதபடியே கூறிய செவ்வந்தி சீரியல் திவ்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருபவர் தான் திவ்யா. இவர் திருமணமாகி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா என்னும் சீரியலில் சித்துவாக நடித்து வரும் அர்னவ் என்பவரை 2ம் திருமணம் செய்திருந்தார். ஏற்கனவே கணவரைப் பிரிந்து ஒரு பெண் குழுந்தையுடன் வாழ்ந்து வந்த இவருக்கு அர்னவின் காதல் வாழ்க்கையாக இருந்தது.


இப்படியான நிலையில் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்திருந்தனர். இந்த சமயத்தில் கடந்த ஆண்டு அர்னவ் திவ்யாவை சித்திரவதைப் படுத்தியதோடு செல்லம்மா சீரியல் கதாநாயகியுடன் தொடர்பில் இருப்பதால் திவ்யாவை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தார். கணவரின் பிரிவைத் தாங்க முடியாத திவ்யா போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இருப்பினும் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையும் பெற்றுள்ளார்.


இந்த பிரிவினையடுத்து இவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் கர்ப்பமாக இருக்கும் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை எனக் கேட்கப்பட்டது.அதற்கு பதில் கூறிய அவர் எனக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கு.


எந்தக் குழந்தை பிறந்தாலும் ஓகே தான். ஆனால் ஒரு காரணத்திற்காக ஆண் குழந்தை வேணும்.ஏனென்றால் அவனை சரியா வளர்க்கணும் ஒரு பெபண்ணை மதிக்கிறது எப்படினு எந்தப் பொண்ணையும் ஏமாற்றக் கூடாது என்று சொல்லி வளர்க்கனும். ஒரு உறவில் இருந்திட்டு வெளிய போகும போது போறதுக்கான உண்மைக் காணரம் தெரியனும். இன்னொருவருக்காக எங்களை விட்டிட்டு போறது எல்லாம் கோமாளித்தனம் ஒருத்தர் பிடிக்கல என்றால் இன்னொருத்தங்க. அவங்க பிடிக்கலனா மற்றவங்க என்று இப்படியே போகக் கூடாது என கண்கலங்க கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement