• Apr 20 2024

பிக்பாஸில் நான் கேட்ட சம்பளத்திற்கு... அவர்களிடம் இருந்து கிடைத்த பதில்...உண்மைகளை உடைத்த மன்சூர் அலிகான்....!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இதில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.இதில் நடக்கும் விசயங்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி,மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து  திடீரென வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.

இவ்வாறு இருக்கையில் ஜி.பி.முத்து வெளியேறியதால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளார்கள்.அவருக்கு பதில் மன்சூர் அலிகான் வரப்போவதாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.நீங்கள் பிக்பாஸ் இற்கு பேவீர்களா எனக் கேட்க அதற்கு பதிலளித்த அவர்...

என்னை பிக்பாஸ் இற்கு கூப்பிட்டாங்க நானும் ஓம் சொல்லி ஒரு சம்பளத்தை கேட்டேன்.அதற்கு அப்புறம் அவங்க அதோட பேச்சை நிறுத்திட்டாங்க.எனக்கு நடிப்பு தான் முக்கியம் இங்கை நடிக்கிறதை அஸ்ரீநான் அங்க போய் செய்வேன்.அங்க ஆடனுமாம் பாடனும் எல்லாம் செய்வேன்.எழும்பும் போது ஆடனும் எல்லாம் முடியும்.எனக்கு இதை விட அதிக சம்பளம் தருவது என்று கூறினால் நான் அங்கே போய் நடிப்பேன்.இதில என்ன வந்தது என கூறியுள்ளார்.அவர் கூறியதுபடி பார்த்தால் சம்பள பிரச்சனையால் தான் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போக முடியாமல் போய்விட்டது போல தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கேள்வி கேட்ட தொகுப்பாளர் அப்ப நீங்க அவங்கள் எல்லோரும் நடிக்கிறாங்க என்று கூறுறீங்களா எனக் கேட்க,பதிலளித்த மன்சூர் 10 பேரை கூட்டிட்டு வந்து தனியா ரூம் இற்குள் அடைத்தால் அவங்க என்ன பண்ணுவாங்க.உங்களுக்கு அதை பார்க்க விரும்பம் இல்லாட்டி வேற சனலை மாத்துங்க.விஜய் டிவி போட்டு அதை விருப்பம் எண்டா பாருங்க இல்லாட்டி விடுங்க எனக் கூறியுள்ளார்.ஒருவேளை நானும் போயிருந்தால் அதைத் தான் செய்து இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement