• Apr 24 2024

பிரபல நடிகருக்காக....நடிகை கங்கனா எழுதிய அந்த விஷயம்...புகைப்படத்துடன் அவரே வெளியிட்டுள்ள பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போஸ்ட் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர் கங்கனா ரனாவத். இவர்  சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். அத்தோடு இவர், 2008 ஆம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் கங்கனா ரனாவத் பெற்றார். அத்தோடு கடைசியாக கங்கனா ரனாவத், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' படத்தில் நடித்து இருந்தார். கங்கனா ரனாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார். அத்தோடு இந்த எமர்ஜென்சி படத்தை கங்கனா ரனாவத்தே இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

தமிழில் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி-2 படத்திலும் கங்கனா ரனாவத்  தற்போது நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, மனோபாலா, ரவி மரியா ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. மேலும் இந்த சூழ்நிலையில் கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்


அதில்,"இன்று நான் சந்திரமுகி படத்தில் எனது பாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. மிகவும் அன்பான குழுவினர். ஷூட்டிங் உடைகளிலேயே இருப்பதால் ராகவா லாரன்ஸ் சாருடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, காலை ஷூட்டிங்கிற்கு முன்பே, புகைப்படம் எடுத்துக்கொள்ள அவரிடம் அனுமதி கோரினேன். ராகவா மாஸ்டர் எப்போதும் என்னை வியப்படைய செய்யும் நபராகவே  உள்ளார்.


கோரியோகிராஃபராக வாழ்க்கையை துவங்கி இன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கும் ஒரு சூப்பர்ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். இருப்பினும் எளிமையான மற்றும் அன்பான மனிதராகவும் அவர் விளங்குகிறார்.

உங்களுடைய பரிவு அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்காக முன்கூட்டியே நீங்கள் அளித்த பரிசு ஆகியவற்றிற்காக நன்றி சார். உங்களுடன் பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனுடன், ராகவா லாரன்சுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.



Advertisement

Advertisement

Advertisement