• Mar 29 2024

எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு எந்த நிலை... பாலியல் புகார் கொடுத்த நடிகை மீண்டும் ஆவேசம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல டைரக்டர் ஒருவர் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா போலீசில் பாலியல் புகார் ஒன்றினை அளித்திருக்கின்றார். ஆம் அவர் வேறு யாருமில்லை இந்தி டைரக்டர் சஜித்கான் தான். இவர் நடிகைகள் பலர் மீது 'மீடூ' இயக்கம் மூலம் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். 


அதாவது சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக பங்கேற்றதற்கு நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தி நடிகை ஷெர்லின் சோப்ராவும் சஜித்கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், இந்த காமகொடூரரை பிக்பாஸ் போட்டியாளராக சல்மான்கான் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்றும் விளாசினார். 


இந்த நிலையில் மறுபடியும் மும்பை ஜூஹு போலீஸ் நிலையத்துக்கு ஷெர்லின் சோப்ரா நேரில் சென்று சஜித்கான் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''சஜித்கான் மீது போலீசில் பாலியல் புகார் கொடுத்தேன். போலீஸ் நிலையத்தில் எனக்கு யாரும் உதவவில்லை. எனக்கே இப்படியான ஒரு நிலை என்றால் சாதாரண பெண் ஒருவரின் நிலைமையை நினைத்து பாருங்கள்" எனக் கூறி இருக்கின்றார். 

மேலும் "சஜித்கானுக்கு நடிகர் சல்மான்கான் உதவி செய்கிறார். இதனால் சஜித்கானை யாரும் தொட முடியாது. வழக்கில் பாரபட்சமற்ற நீதி வழங்க வேண்டும்" என்று உணர்ச்சி பூர்வமாகத் தெரிவித்து இருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement