• Mar 28 2024

துனிஷா ஷர்மாவைத் தொடர்ந்து துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

யூடியூப் மூலமும் தனி சேனலை உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு பிரபல்யமானவர் தான் லீனா நாக்வன்ஷி .சத்திஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியைச் சேர்ந்த பி.காம் படித்து வருகின்றார். வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கூட கிறிஸ்துமஸ் தினத்தன்று ரீல்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.


அவ்வப்போது மாடர்ன் ஆடையுடன் போஸ் கொடுத்து ஆட்டம் போடும் ரீல்களை வெளியிட்டு வந்தார் லீனா தனது தாய் மற்றும் சகோதரருடன் ராய்கர் பகுதியில் வசித்து வந்தார்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் வீட்டு மாடியில் திடீரென துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த போலீசார் லீனாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் சிக்காததால், விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


பெற்றோரிடம் விசாரித்த போது, அவர்களும் தங்கள் மகளுடன் எந்த தகராறும் இல்லை என்று கூறியுள்ளனர். அதனால் வெளிநபர்கள் மூலம் ஏற்பட்ட மன உளைச்சலால் லீனா தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் மும்பை அருகே படப்பிடிப்பில் இருந்த நடிகை துனிஷா ஷர்மா திடீரென மேக்கப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அந்த சம்பவத்தின் சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு பிரபலம் உயிரிழந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





Advertisement

Advertisement

Advertisement