• Apr 20 2024

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கைத் தொடர்ந்து அவரது வீட்டில் ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு- சகோதரி போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

மேலும் மன நல மருத்துவரிடமும் சுஷாந்த் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்துவந்தனர். சுஷாந்த்தின் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.


அதற்கேற்ப சுஷாந்த் சிங்கின் தந்தை கேகே சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி தனது மகனை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவருக்கு போதை மருந்து கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவந்தது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோக் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சுஷாந்த் சிங்கின் வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த்துக்கு உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.


பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, ''சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பொழுது கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தது. 5 உடலில் ஒன்று விஐபியின் உடல். அந்த உடலை நாங்கள் உடற்கூராய்வு செய்தபோது எங்களுக்கு அந்த உடல் சுஷாந்தினுடையது என்று தெரியவந்தது.

அவரது உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன. குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன. இதனைப் பார்த்தபோது என் உயர் அதிகாரிக்கு இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன். அப்போது முடிந்த வரை சில புகைப்படங்கள் எடுத்து பின் அவரது உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார்'' என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சுஷாந்த்சிங்கின் பாசக்கார நாய் உயிரிழந்தது குறித்து சுஷாந்தின் சகோதரி விட்டரில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.


சுஷாந்த் சிங் உயிரிழந்த போது அவரது செல்ல பிராணி குறித்தும் சமூக வலைதளங்களில் செய்திகள் அதிகமாக வலம் வந்தன. சுஷாந்த் ஆசை ஆசையாக வளர்த்த செல்லப்பிராணி ஃபட்ஜ் உடன்தான் அதிக நேரத்தைப் பகிர்ந்துள்ளார். பல நாட்கள் அவரின் சோகங்களுக்கு ஃபட்ஜ் ஆறுதலாக இருந்திருக்கலாம்.

அதனால் தான் என்னவோ சுஷாந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செல்ஃபோனில் பார்த்து சோகமாக படுத்துக்கிடக்கும் புகைப்படங்கள் அப்போது பார்ப்பவர்களின் கண் கலங்க வைத்தது.


இந்நிலையில் நடிகர் சுஷாந்த்சிங்கின் பாசக்கார நாய் உயிரிழந்ததை அவரது சகோதரி சமூகவலைதளத்தில் பதிவிட்டு, ஃபட்ஜ் இறுதியாக உனது நண்பருடன் (சுஷாந்த் சிங்) சேர்ந்துவிட்டாய். இதயம் உடைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement