• Apr 20 2024

நயன்தாராவை கரம் பிடித்த விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இன்று திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது.

கடந்த 2015இல் இயக்குநர் விக்கியின் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடிதான் என்ற படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். அன்று மலர்ந்த நட்பு காதலாக மாறி 7 வருடங்களை கடந்து இன்று திருமணத்தில் கைகோர்த்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாராவை கரம் பிடித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிந்துள்ளார்.அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.

"கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கும், என் வாழ்க்கையில் கடந்து வந்த அழகான மனிதர்களுக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளத்திற்கும்,ஒவ்வொரு நல்ல தருணத்துக்கும், ஒவ்வொரு தற்செயலுக்கும், ஒவ்வொரு ஆசிர்வாதத்திற்கும்,வாழக்கையை அழகாக்கிய,ஒவ்வொரு பிரார்த்தனைக்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன்". என்று கூறி இந்த நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement