• Apr 25 2024

உடல் நலக்குறைவு காரணமாக பிரபல இயக்குநர் திடீர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் முக்கிய இயக்குநராக இருப்பவர் தான் கே.பி.சஷி.இவர் எழுத்தாளரும், கம்யூனிஸ்ட் சிந்தனையாளருமான கே தாமோதரனின் மகன் ஆவார். கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘இலையும் முள்ளும்’ படத்தின் மூலம் பிரபலமானார். 

இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதுமட்டுமின்றி இவர் புகழ்பெற்ற ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். 1970ல் ஜேஎன்யுவில் படிக்கும் போது கார்ட்டூன் துறையில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.


 இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாலிவூட் திரைப்படமான 'ஏக் அலக் மௌசம்' படத்தின் மூலம் பாலிவூட்டில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நந்திதா தாஸ், அனுபம் கேர் மற்றும் ரேணுகா ஷஹானே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரபல மலையாள நடிகர் கோபியும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் கே.பி.சஷி உடல் நலக்குறைவு காரணமாக இறப்புக்குள்ளானார். இவரது மறைவு மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான நடிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement