தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் இந்த வருடம் கடைசியில் 'விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள் வந்தன. அதுமட்டுமல்லாது 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு 'மும்பைக்கார், ஜவான், மேரி கிறிஸ்துமஸ்' ஆகிய இந்தி படங்கள் மற்றும் 'மைக்கேல் என்ற' தெலுங்கு படமும் இவரின் கைவசம் உள்ளன.
வில்லன் அவதாரத்தை அடுத்து விஜய்சேதுபதி இசையமைப்பாளர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய்சேதுபதிக்கு நடிப்பை தவிர்த்து இசைத்துறையிலும் அதிக ஈடுபாடு உள்ளது. சிறுவயது முதலே இசை பயில வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது.
ஆனால் அதற்கான நேரம் அமையவில்லை. தற்போது இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவிடம் இணைந்து விஜய் சேதுபதி இசை கற்று வருகிறார். விஜய்சேதுபதி நடித்து 2016-இல் வெளியான 'சேதுபதி' படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இசையை முறையாக கற்று முடித்ததும் புதிய படமொன்றுக்கு விஜய்சேதுபதி இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரின் புது அவதாரத்தை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனராம்.
Listen News!