• Apr 20 2024

தீ தளபதி பாடல் குறித்து ரசிகர்கள் கவலை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலை நினைத்து சிகர்கள் பெரிதும் கவலையடைகிறார்கள்.

விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.மேலும்  இப்படம் விஜய் படங்களில் இருந்து சற்று மாறுபட்டு இருக்குமென்ற தகவலினால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக உள்ளனர். இப்படத்தின் மூலம் ராஷ்மிகா விஜய்யுடன் முதல் முறையாக ஜோடியாக நடிக்கின்றார். 

எனினும் இதையடுத்து தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இது தவிர சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது. சமீபத்தில் இப்படத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் வெளியாகி செம ஹிட்டடித்தது. இந்நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது

விஜய் வாரிசு திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இது வழக்கமான விஜய் படங்களை போல இருக்காது எனவும் தகவல்கள் வந்துள்ளது. அத்தோடு இப்படத்தின் போஸ்டர், பாடல்கள் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவ்வாறுஇருக்கையில் விஜய் மற்றும் வம்சி கூட்டணியில் உருவாகும் முதல் படம் வாரிசு என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது

வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே ரஞ்சிதமே என்ற பாடல் வெளியானது. தளபதி விஜய் பாடிய இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இவ்வாறுஇருக்கையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி இன்று வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடியது மட்டுமல்லாமல் இப்பாடலின் லிரிகள் வீடியோவில் நடனமும் ஆடி அசத்தியுள்ளார் சிம்பு. எனினும் தற்போது இப்பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்பாடலின் வரிகள் விஜய்க்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது


இவ்வாறுஇருக்கையில்  சிம்புவின் குரலில் வெளியான தீ தளபதி பாடலை ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே நேரத்தில் சில ரசிகர்கள் கவலையாகவும் உள்ளனர். ஏனென்றால் இப்பாடலை பார்த்த சில ரசிகர்கள் தீ தளபதி பாடல் படத்தில் இடம்பெறுமா இல்லை படம் முடிந்தபின் வரும் பாடலாக இருக்குமா என யோசித்து வருகின்றனர். 

படத்தோடு இப்பாடல் பொருந்தி வைத்தால் வேற லெவெலில் இருக்கும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது. இந்நிலையில் ஒருவேளை படம் முடிந்த பின் இப்பாடல் வந்தால் சில திரையரங்கங்களில் நேரம் கருதி பாடலை போடமாட்டார்கள் என ரசிகர்கள் நினைத்து கவலைப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement