தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் பெயரை சொன்னாலே ரசிகர்கள் உடனே கூச்சலிட்டு ஆர்ப்பரிப்பார்கள். அந்தளவிற்கு இவரின் படங்களிற்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதிகளவில் பட்ஜெட் செலவழித்து பிரமாண்டமாக படங்களை எடுக்கக்கூடிய திறமை இவருக்கு உண்டு.
ஷங்கரின் மூத்தமகள் ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் கடந்த வருடம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகனான ரோஹித் தாமோதரன் பாலியல் வழக்கில் சிக்கினார்.
அதாவது கிரிக்கெட் பயிற்சி பெற வந்த 16 வயது பெண்ணிடம் ரோஹித் உட்பட 5 பேர் தவறாக நடந்துகொண்டதாக கூறி இவர்கள் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஷங்கர் மருமகன் இப்படியான ஒரு குற்றச்சாட்டில் சிக்கியமை திரையுலகில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கால் மன உளைச்சலில் இருப்பதாக கூறி தானாக ஒரு முடிவை எடுத்து ரோஹித் அறிவித்து இருக்கிறார். அதாவது தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறாராம்.
மேலும் "மனரீதியாக சரியான பிறகு வருகிறேன்" எனவும் அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த முடிவானது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!