விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திற்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. அதற்கான காரணம் என்னவெனில் இந்நிகழ்ச்சிகள் யாவுமே கலக்கலான நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களும் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள்.
அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் Mr & Mrs சின்னத்திரை. இந்நிகழ்ச்சியியானது 2 சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில் தற்போது 3ஆவது சீசன் இடம்பெற்று வருகின்றது.
அத்தோடு மாகாபா ஆனந்த் மற்றும் நிஷா ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக கோபிநாத் மற்றும் திவ்யதர்ஷினி இருந்து சிறப்பித்து வருகின்றார்கள்.
அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் மிகவும் கலகலப்பான டாஸ்க்குகள் கொடுத்து ரசிகர்களின் மனங்களைக் கவர்வதோடு, போட்டியாளர்களையும் இறுதிகட்டத்திற்கு தேர்வு செய்து வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்திற்கு தேர்வான போட்டியாளர்களை நடுவர்கள் அறிவித்துள்ளார்கள். அதன்படி இறுதிகட்டத்திற்கு செல்லும் போட்டியாளர்களாக சிங்கப்பூர் திலீப்பன் ஜோடி, ராம் ஜோடி, மதன் ஜோடி, ரஹ்மான் ஜோடி மற்றும் மகாலிங்கம் ஜோடி தேர்வாகியுள்ளனர்.
ஆகவே இந்த ஜோடிகளில் 3ஆவது சீசன் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!