சிலம்பரசன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் பாடகரும் ஆவார்.
சிலம்பரசன் என்னும் இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான இவர், சிம்பு, எஸ்.டி.ஆர் என்ற புனைப்பெயர்களில் ரசிகர்களிடம் பிரபலமானவர். மேலும் இவர் இவர், தமிழில் ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார். மேலும் சிலம்பரசன் என்றாலே தெரியாதவர்கள் யாருமே இல்லை. இவருக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சிம்பு மாநாடு படம் மூலம் செம கம்பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து வெந்து தனிந்தது காடு படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வெந்து தனிந்தது காடு திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 55 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு தரப்பு கூறி வந்தது.
ஆனால், உண்மை என்னவென்றால் இப்படம் மொத்த வசூலே 55 கோடி தானாம் வசூல் செய்துள்ளதாம். சிம்புவின் மனம் சந்தோஷப்பட இப்படி ஒரு பொய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Listen News!