தமிழ் சினிமாவில் ஒரு கிடாயின் கருணை மனு என்னும் திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் இசையமைப்பாளர் ரகுராம். இவர் இதனைத் தொடர்ந்து இன்னும் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!