• Apr 25 2024

ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல கானா பாடகர்-கடுமையாக விசாரணை நடத்தி வரும் போலீஸார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த கானா பாடகரும் இசையமைப்பாளருமான சபேஷ் சாலான் என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

பின்பு அந்த பாடகர் அந்த பெண்ணுடன் எடுத்துக் கொண்ட வீடியோவையும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவேன் எனக் கூறி அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக சாலமோனின் தந்தையிடம் கூறியபோது தற்பொழுது தந்தையும் மகனும் சேர்ந்து அவரை மிரட்டுகின்றார்களாம்.

இதனால் சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த அந்த பெண் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கானா பாடகர் சபேஷ் சாலமனிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

தனது இஷ்டத்துக்கு எல்லாம் இணங்க வேண்டும் என்றும், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கொன்று விடுவேன் என கானா பாட்டுப் பாடியே தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் சபேஷ் சாலமன் என தனது புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement