• Apr 19 2024

அஜித்தைப் பார்க்க 8வருடமாக முயன்றும்.. முடியாமல் போய்விட்டது... வருந்தும் பிரபல இயக்குநர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'நேரம்' என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அதுமட்டுமல்லாது இவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை இவருக்குப் பெற்றுக் கொடுத்தது. 


அதுமட்டுமல்லாது இவர் 'கோல்டு' படத்தினையும் இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர். இருப்பினும் கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தன.

இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் போட்ட முகநூல் பதிவபடு வைரலானது. அதன் பின்னர் அவர் அதை நீக்கியமை குறிப்பிட்டத்தக்கது. அந்தவகையில் கோல்டு படம் அமேசான் பிரைம் ஓடிடியில் டிசம்பர் 29ஆம் நாள் வெளியானது. 


இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரனிடம் கமெண்டில் "அஜித்துடன் ஒருப்படம் பண்ணுங்க தலைவா" என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ளார் அல்போன்ஸ்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர் கூறுகையில் "அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் வலதுக்கை மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி கேட்டு இப்போது 8 வருஷம் ஆகிறது" எனக் கூறியிருந்தார்.


அத்தோடு "எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி? அஜித் சாரைப் பார்ப்பதற்கு முயற்சி செய்து செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏகே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே ஸாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும்" எனவும் சற்று வருத்தமாக கூறியிருக்கின்றார் அல்போன்ஸ்.

Advertisement

Advertisement

Advertisement