• Apr 17 2024

மகேஷ்பாபுவின் தந்தையைத் தொடர்ந்து மாரடைப்பால் இறந்த பிரபல இயக்குநர்- கடும் அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் முரளி கிருஷ்ணா. இவர் கன்னடத்தில் காரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் முரளி கிருஷ்ணா, மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


முரளி கிருஷ்ணாவின் மறைவு கன்னட திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தொழில் ரீதியாக வழக்கறிஞராக இருந்தாலும் சினிமாவின் மீது கொண்ட மோகம் காரணமாக இயக்குநரானார் முரளி கிருஷ்ணா. பின்னர் அதில் சக்சஸ்புல் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவர் பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார் என்பதும் முக்கியமாகும். 


இவரைப் போல பிரபல தெலுங்கு நடிகரும் நடிகர் மகேஷ்பாபுவின் தகப்பனுமான கிருஷ்ணாவும் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement