• Apr 24 2024

படுக்கையில் தல தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகை: இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தீபாவளி பண்டிகையை படுக்கையில் கொண்டாடியதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாலிவுட்  பிரபல நடிகையான ஆலியா பட்.

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மும்பையில் இருக்கும் அவர்களின் வீட்டில் தான் திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி இரண்டு மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து புகைப்படம் வெளியிட்டார் ஆலியா.அதாவது  2 மாதம் கர்ப்பமாக இருப்பவரின் வயிறு இவ்வளவு பெரிதாக இருக்காது. கர்ப்பமான பின்னர்  தான் திருமணம் நடந்திருக்கிறது என்று ஆலியா பட்  சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தார்கள்.

இதனை மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள்.இவ்வாறுஇருக்கையில் தீபாவளி பண்டிகை அன்று சமூக வலைதளத்தில் ஆலியா பட் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

அத்தோடு கடந்த ஆண்டு தீபாவளியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், இந்த ஆண்டு தீபாவளி அன்று தான் படுக்கையில் பூனை எட்வர்டுடன் படுத்திருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஆலியா தெரிவித்திருப்பதாவது, தீபாவளியை படுக்கையில் கொண்டாடுகிறேன் என்றார்.

கர்ப்பமாக இருப்பதால் படுக்கையில் இருக்கிறாராம் ஆலியா. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ரன்பிர் கபூருடன் சேர்ந்து கொண்டாடினார்.


ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் சேர்ந்து பிரம்மாஸ்திரா படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இதற்கிடையே ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார் ஆலியா பட். மேலும் அவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸான ஆர்ஆர்ஆர், கங்குபாய் கத்தியவாடி, பிரம்மாஸ்திரா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

அத்தோடு  நெட்ஃப்ளிக்ஸில் வெளியான டார்லிங்ஸை தயாரித்ததுடன், அதில் நடிக்கவும் செய்திருந்தார் ஆலியா பட்.




Advertisement

Advertisement

Advertisement