• Apr 25 2024

சமந்தாவை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற முன்னாள் கணவர் நாகசைதன்யா ..? வெளியானது தகவல்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அரியவகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் நாக சைதன்யா மருத்துவமனைக்கே நேரில் சென்றதாக சமூக வலைதளங்களில் செய்தி தீயாய் பரவி வருகின்றது.

தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமலும், சமூக வலைதளங்கள் பக்கம் தலைகாட்டாமலும் இருந்து வந்தார். அவர் உடல்நிலை சரியில்லாததன் காரணமாகத் தான் இவ்வாறு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

 எனினும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.. அதில் தான் மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறி இருந்தார். சமந்தா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வந்தனர்.

இதனிடையே சமீபத்தில் சமந்தாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் நாக சைதன்யா மருத்துவமனைக்கே நேரில் சென்றதாக சமூக வலைதளங்களில் செய்தி தீயாய் பரவி வருகின்றது.ஆனால் அந்த தகவல் துளிகூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. சமந்தா தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம்.


 அதேபோல் நாக சைதன்யாவும் ஷூட்டிங்கில் படு பிசியாக உள்ளாராம். எனினும் இதன்மூலம் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதாக பரவி வரும் தகவல் துளிகூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. மறுபுறம் நாக சைதன்யாவின் சகோதரர் அகில், சமந்தாவுக்கு சமூக வலைதளம் வாயிலாக விரைவில் நலம்பெற்று வருமாறு வாழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement