பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆகி கடந்த ஞாயிறன்று வெளியேறினார். அதேபோல் ஜிபி முத்துவும் விலகிவிட்டதால், தற்போது 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
போட்டியாளர்களுக்கு வார வாரம் டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் ‘நானும் பொம்மை.. நீயும் பொம்மை’ என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். நேற்று மகேஸ்வரி - தனலட்சுமி இடையே சண்டை ஏற்பட்டது.
இதனை அடுத்து தற்பொழுது தனலட்சுமி அசீமுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்பொழுது வெளியாகிய இரண்டாவது ப்ரோமோவில் தனலக்ஷ்மி அசீமை நான் தள்ளி விட்டதாக சொன்னாங்க.எனக்கு கமல் சேர் வந்த அந்த குறும்படத்தை போட்டுக் காட்டணும். அதில அவங்க சொன்ன மாதிரி இருந்திச்சு என்றால் நான் வீட்டை விட்டு போறேன்.
இல்லை அப்படி இல்லை என்றால் எல்லாரும் என்னிடம் மன்னிப்புக் கேட்கணும் என்று ரச்சிதா மற்றும் ஷிவினுக்கு கூறியுள்ளார் என்பதைக் காணலாம்.
Listen News!