• Apr 17 2024

'கடைசியில் அவர் பூனை மற்றும் நாயுடன் தான் சாகப் போகின்றார்'- சமந்தா குறித்து டுவிட் போட்ட நபர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. தனது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் உச்சந் தொட்ட நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.

தனது கணவரான நாகசைத்தன்யாவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து வாழும் சமந்தா தனது கெரியரில் அதிக கவனம் செலுத்துவதோடு பிஸியான நடிகையாகவும் வலம் வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் சகுந்தலம், யசோதா, குஷி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

சமீபத்தில் குஷி பட படப்பிடிப்பில் சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டாவிற்கு விபத்து ஏற்பட்டதாகவும் உடனே படக்குழு அவர்களை மீட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் சமந்தாவை குறித்து ஒரு ரசிகர் மோசமாக போட்ட கமெண்ட் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Samanthaprabhu2/status/1530076054937038849

பொதுவாக நடிகைகள் எப்போது தனது செல்ல நாய்களுடன் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் சமந்தா ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ஒரு ரசிகர், கடைசியில் அவர் நாய் மற்றும் பூனைகளுடன் தான் சாகப்போகிறார் என பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த சமந்தா அப்படி நடந்தால் சந்தோஷம் தான் என பதில் கொடுக்க அந்த டுவிட் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/LcXVkYfdg0E



பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement