• Mar 28 2024

என் கணவர் என் வாழ்க்கையில் வர முன்னரே நான் அந்த உறவில் இருந்து விலகி விட்டேன்... முன்னாள் காதலர்கள் குறித்து மனம் திறந்த பிரியங்கா சோப்ரா..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா விஜய்யுடன் இணைந்து 'தமிழன்' திரைப்படத்தில் நடித்து அதன் மூலமாக தமிழ்த் திரையுலகிற்குள் அறிமுகமானார். இருப்பினும் இவர் பாலிவுட் சினிமாவில் தான் அதிகளவில் கவனம் செலுத்தி உள்ளார். அத்தோடு அங்கு முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரியங்கா தனது முன்னாள் காதல் உறவுகள் குறித்து வெளிப்படுத்தியிருகின்றார். அதாவது "ஒரு காலத்தில் தான் ஒரு காதலில் இருந்து இன்னொரு காதலுக்கு பயணித்ததாகவும், அப்போது தன் தவறுகளை புரிந்து கொள்ள முடியவில்லை" என்றும் பிரியங்கா சோப்ரா மனம் திறந்து கூறி உள்ளார். 


மேலும் "எனது முன்னாள் காதலர்கள் அனைவரையும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் ஆனால் அந்த காதல்கள் அனைத்தும் தோல்வியடைக் காரணம் கருத்து வேறுபாடுகள் - அல்லது ஒற்றுமையின்மை. 'உறவுகளுக்கு இடையே நான் நேரம் ஒதுக்கவில்லை. என்னுடன் பணியாற்றிய பல நடிகர்களை காதலித்தேன். உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியும் என்பது என் எண்ணமாக இருந்தது. 


எனது யோசனைகளுக்கு ஏற்ப உறவுகளை மேம்படுத்த முயற்சித்தேன். ஆனால் பல உறவுகள் மிகவும் மோசமாக முடிவடைகின்றன. ஆனால் அவை எதுவும் மோசமானவை என்று சொல்ல முடியாது. அவர்கள் அனைவரும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள்.மிகவும் அற்புதமானவர்கள். என் கணவர் என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பே நான் காதல் உறவுகளில் இருந்து விலகி விட்டேன்" என்றார்.

அதுமட்டுமல்லாது "நான் ஏன் தொடர்ந்து அதே தவறுகளை செய்கிறேன் என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எனது வேலை அல்லது மற்ற விஷயங்களை என் துணைக்காக ஒதுக்கி வைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எனக்காக நிற்கவில்லை. ஒரு உறவு முறிந்த பிறகு உடனடியாக அடுத்த உறவில் குதிக்க கூடாது என்பது எனக்கு பின்னர் புரிந்தது. 

இதனால் நான் என்னை நானே அழித்துக் கொண்டிருக்கிறேனா என்று யோசித்தேன்.என் குடும்பம் மற்றும் என்னை உண்மையாக நேசிக்கும் நபர்களைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்தேன். காதல் உறவில் நுழையும் போது, எனக்குச் சொந்தமான அனைத்தையும் மறந்து போகும் நிலை இருந்தது. எனது பெரும்பாலான உறவுகளில் நான் கண்ணுக்குத் தெரியாதவளாக மாறிவிட்டேன்" எனவும் தனது காதல் குறித்து மனம் திறந்து கூறி உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement