• Apr 25 2024

ரோஜா சீரியல் நாயகன் வெளியிட்ட எமோஷ்னல் பதிவு- வருத்தப்படும் ரசிகர்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இதைப் பற்றிய பலர் கலாய்த்து கொண்டிருந்தாலும் குடும்ப ரசிகர்கள் பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாமல் அர்ஜுன் சார் என்று கணவரை அழைத்து முதல் முதலாக கணவருக்கு சார் பட்டம் கொடுத்தது இந்த ரோஜா சீரியலில் தான்.


இதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு சீரியல்களில் கணவரை சார் என்று அழைத்து வருகின்றனர் .சன் டிவியில் பல வருடங்களாகவே டிஆர்பி யில் முதலிடத்தில் இந்த ரோஜா சீரியல் தான் இருந்து வருகிறது.


இந்த நேரத்தில் தான் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் சிப்பு தனது இன்ஸ்டாவில் ஒரு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். 


அதில், இன்று தான் ரோஜா சீரியலின் எனது கடைசி நாள், அர்ஜுன் சாராக எனது கடைசி நாள். எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனருக்கு நன்றி. அதோடு எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement