• Apr 24 2024

பேட்டி நடுவே ஜி.பி முத்துவுடன் வீடியோ காஃலில் பேசிய நடிகர் சசிகுமார்- அவர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் சசிகுமார்.இவர் தற்பொழுது செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில்,'நான் மிருகமாய் மாற' என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த நவம்பர் 18ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் இவருடன் ஹரிப்ரியா, விக்ராந்த், சரத் அம்பானி,ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.இதனை அடுத்து சிவகுமார் நடிப்பில் அடுத்ததாக காரி என்னும் திரைப்படம் நாளைய தினம் வெளியாகவுள்ளது.


இதனால் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் சசிகுமார் கலந்து கொண்டு வருகின்றார். அந்த வகையில் அண்மையில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது , ஜிபி முத்துவுடன் வீடியோ காஃலில் பேசியுள்ளார். அதில் ஏன் பிக்பாஸில் இருந்து வெளியே வந்துவிட்டீர்கள்.? என கேட்க, அதற்கு ஜிபி முத்துவோ, “அதான் மகனுக்காக வெளியேறினேன்” என சொல்ல, அப்போது பேசிய சசிகுமார், “இப்போது வீட்டில் அனைவரும் நலமா? பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல உங்கள் கையில் ஒரு சேனல், சோசியல் மீடியோ உள்ளதால் உங்களுக்கு பொறுப்பு உள்ளது.

 உங்கள் மூலம் பேசப்படும் கருத்துக்கள் பலரை சென்றடைகிறது. எனவே அதில் பாசிடிவான நிறைய விஷயங்களை சொல்லுங்கள். மற்ற எதிர்மறை விஷயங்களை கவனமாக தவிர்க்க வேண்டும் நீங்கள்” என கோரிக்கை வைப்பதாக குறிப்பிட்டார்.அப்போது ஜிபி முத்து , “இதை நான் ஏற்கிறேன். நிச்சயம் அதை செய்கிறேன்.


அதே போல் நான் பேசுவது வட்டார வழக்கு பேச்சு. அதில் வரக்கூடிய வார்த்தைகளை நீங்கள் சொல்லவில்லையே?” என கேட்க,  அதற்கு சசிகுமாரோ, “நான் அந்த வட்டார பேச்சை சொல்லவில்லை. உங்கள் கருத்தையும் சொல்லப்படும் விதத்தையும் பாசிடிவாக சொன்னால் அது நிச்சயம் பரவும். அந்த பொறுப்பை நினைவில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அவ்வளவே” என பேசினார்.இதனை ஜி.பி முத்துவும் கேட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement