• Apr 23 2024

மரமண்டை உனக்குப் புரியாதா... தயவு செய்து என்னை விட்டிடு... ஷிவினிடம் கெஞ்சிய கதிரவன்....!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசனானது என்றுமே இல்லாத அளவிற்கு பல ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து வருகின்றது. இதற்கு முக்கியமான காரணமே அங்குள்ள போட்டியாளர்கள் தான். அவர்களுக்கிடையில் காதல், சண்டை என அனைத்துவிதமான உணர்வுகளும் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றன. 

அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் கடந்த 2 சீசன்களாக பாகுபாடின்றி திருநங்கைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த சீசனில் திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியாளராக கலந்துகொண்டார். எனினும் இவர் சில நாட்களிலேயே மருத்துவ காரணங்களுக்காக அந்நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். 


அதேபோல் இந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்துடன் திருநங்கை ஷிவின் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார். பைனல் லிஸ்ட்டில் இவரும் ஒருவராக இருப்பார் எனப் பலரும் கூறி வருகின்றனர். இதற்கான காரணம் அந்த அளவுக்கு இந்த சீசனில் சிறப்பாக டாஸ்க்கை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார்.


இந்நிலையில் ஷிவின் பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் சக போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கதிரவன் மீது நெடுநாளாக தனக்கு உள்ள கிரஷ்ஷை அவரிடமே வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக இரவில் ஒரு மணிநேரமாக கதிரவனுடன் அமர்ந்து தனியாகப் பேசிய ஷிவின், உங்களை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் என பலமுறை தனது காதலை சூசகமாக சொல்லி இருக்கின்றார்.


அந்தக் காதல் புரிந்தும் "தனக்கு அது புரியல" என மிக்சர் போல் கதிரவன் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அவரைப் பற்றிப் பெருமையாக பேசிய கதிரவன் பின்னர் தன்னை விட்டிடும் படி கூறி ஷிவினிடம் கை எடுத்துக் கும்பிட்டுக் கேட்கின்றார் கதிரவன். 


அதுமட்டுமல்லாது "இந்த வீட்டில் நாம் டாஸ்க்கிற்காக மட்டும் பேசினால் போதும், மற்றும் படி பேசத் தேவையில்லை, உனக்கு இது எல்லாம் புரியுதா மரமண்டை" என ஷிவினைப் பார்த்து கேட்கின்றார். அதுமட்டுமல்லாது "நான் போகிறேன் மேலே மேலே" என்ற பாடலையும் பாடிக் காட்டுகின்றார்.

இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement