• Mar 29 2024

பொய்ச் செய்திக்கு இடம் தராதீர்கள்... ட்விட்டர் ஓனருக்கே ஓடர் போட்ட வைரமுத்து...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகத்தில் உள்ள பணக்காரர்கள் பட்டியலின் வரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். இவர் உலகளவில் பலகோடி மக்கள் பயன்படுத்தும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி உள்ளார். அத்தோடு அவர் ட்விட்டர் நிறுவனத்தின் அதிபரான பின்னர் உடனடியாக அதன் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் நிதிப்பிரிவு அதிகாரியை பணியில் இருந்து நீக்கினார். இவரின் இந்த அதிரடியான செயற்பாடுகள் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.


அதுமட்டுமல்லாது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக முடக்கம் செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். எலான் மஸ்கின் இந்த நடவடிக்கைக்கு ட்ரம்ப் மனப்பூர்வமாக நன்றியும் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறு அடுத்தடுத்து ட்விட்டரில் புதிய நடைமுறைகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ள எலான் மஸ்க் அதற்கான பணிகளையும் விரைவாக மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் ட்விட்டரில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர போகிறார் என்பதை தெரிந்துகொள்ள அதன் பயனர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் அதிபராகி உள்ள எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்து அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்தோடு அவருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார். 

அதாவது "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே! இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன்.  

வலதுசாரி இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும், மலிந்த மொழிக்கும், இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" எனக்கூறி ட்விட்டரில் பதிவு ஒன்றினை இட்டிருக்கின்றார்.


இவரின் இந்தப் பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement