• Apr 25 2024

"அதற்கு முன்னாடி கனவு காணாதீர்கள்"- அனுபவத்தில் தத்துவம் சொன்ன செல்வராகவன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இயக்குநர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அதில் இயக்குநர் செல்வராகவனும் ஒருவர். 

குறிப்பாக ஒரு படத்தின் நடிகர் யாராக இருந்தாலும், இயக்குநர் செல்வராகவன் என்ற ஒரு அடையாளத்தை வைத்தே படம் பார்க்க செல்லும் ரசிகர்கள் ஏராளம் . அந்தளவிற்கு அவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாகக்கூடிய படங்களாக அமைந்தன.


இதுவரை காலமும் இயக்குநராக இருந்து வந்த இவர் தற்போது நடிகராகவும் களமிறங்கி உள்ளார். அந்தவகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் 'பகாசுரன்' என்ற படம் வெளியாகி இருந்தது. இப்படம் வெளியான சந்தோஷத்தில் இருக்கும் இவர் தற்போது தத்துவக் கருத்து ஒன்றினையும் வெளியிட்டிருக்கின்றார். 


அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில் "பணம் கையில் வந்தால் தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளைத் திட்டமிட வேண்டாம். அனுபவம் இது தத்துவமில்லை" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


இவரின் இந்தப் பதிவானது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருப்பதனால் அதனை வைரலாக்கி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement