தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய திரைப்பயண ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து அதன்மூலம் கிடைத்த புகழால் சினிமாவிற்குள் நுழைந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மேடையில் மிமிக்ரி செய்த பழைய வீடியோ ஒன்று சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையில் சிக்கி இருந்தது. அதில் சினிமாப் பிரபலங்களான சாலமன் பாப்பையா, சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோரது குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்துள்ளார்.
அப்போது சிம்பு அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார் என்கிற கான்செப்டில் மிமிக்ரி செய்து பேசியிருந்தார் சிவகார்த்திகேயன்.
அதாவது சிம்புவைப் போன்று பேசுகையில் "கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்னு சொல்லியிருக்கிறது. நான் அரசியலுக்கு வந்தா அதை நிறைய பேரை வாங்க வைப்பேன் சார்" என்றார்.
சிவகார்த்திகேயன் அந்த ஷோவில் அவ்வாறு பேசும் போது சிம்புவும் இருந்திருக்காராம். இது குறித்த வீடியோவை இவர்கள் இருவருக்குள்ளும் சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் ஒரு சிலர் அப்போதே வைரலாக்கி இருந்தனர். அதை தற்போது பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சிம்புவே சில வருடங்களுக்கு முன்பு பேசியுள்ளார். அதாவது "சிவகார்த்திகேயன் உழைத்து அந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர் வெற்றியில் எனக்கும் சந்தோஷம், நானே போன் செய்து பாராட்டினேன். உங்கள் சண்டையில் என்னை இழுக்காதீர்கள்" என பேசியுள்ளார்.
Listen News!