• Apr 25 2024

இந்த நாள் ஞாபகமிருக்கா..? தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைவார்களா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தை பார்த்து தான் தனுஷ் மீது காதலில் விழுந்தார். ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலிக்கும் தகவல் ஊடகங்களில் கிசுகிசுவாக கசிந்தது.இதன் பின்னர் தனுஷே ஐஸ்வர்யாவும் தானும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும் பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த விஷயம் ரஜினிகாந்துக்கு தெரியுமா, அவருக்கு இந்த திருமணத்தில் சம்மதமா என பத்திரிகையாளர்கேள கேள்வி கேட்க, தங்களின் திருமணத்திற்கு அவருடைய சம்மதம் அவசியமில்லை என்று கூறினார் தனுஷ். தனுஷின் இந்தப் பேட்டி ரசிகர்களிடத்தே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவை தனுஷுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை ரஜினிகாந்த். ஆனால் மகளின் விருப்பத்திற்காக, இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார் நடிகர்  ரஜினிகாந்த். அத்தோடு கடந்த 2004 ஆம் ஆண்டு சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது ஐஸ்வர்யா தனுஷின் திருமணம்.

மேலும் இவர்களுக்கு திருமணத்திற்கு பின் யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் பிறந்தார்கள். இந்த நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் பல முறை குடும்பத்தினர் இருவருக்கும் இடையில் சமாதான செய்து வைத்தனர். இவ்வாறுஇருக்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி இரவு, இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழப்போவதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். ஒரே மாதிரியான அந்த அறிக்கையில் இருவரின் பெயர்கள் மட்டுமே மாறியிருந்தது.


அதில் '18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த எங்கள் பயணம், புரிதல், அனுசரிப்பு என இருந்தது.அத்தோடு  இன்று எங்கள் பாதையில் பிரியும் ஓர் இடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். எங்களை தனி நபர்களாக சிறப்பாக பிரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனிமனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.' என தெரிவித்து இருந்தனர்.

இந்த அறிக்கையின் மூலம் தங்களின் 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் ஐஸ்வர்யாவும் தனுஷூம். அவர்களின் இந்த அறிக்கை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அத்தோடு  இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். தங்களுக்காக இல்லாவிட்டாலும் தங்களின் குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தாவது இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர்.


தனுஷ் குடும்பத்தினரும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரும் பலமுறை இருவரிடமும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் இருவருமே தங்களின் முடிவுகளில் உறுதியாக இருந்தனர். சாதாரண குடும்ப பிரச்சனைதான், சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்றார் தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜா. அத்தோடு மகன்கள் இருவரும் அப்பா அம்மா என மாறிமாறி இருந்து வருகின்றனர். எப்படியும் இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று காத்திருந்தனர் ரசிகர்கள். ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதாக அறிவித்து இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரை இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான அறிகுறியே தெரியவில்லை.


நடிகர் தனுஷ் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகின்றார்.அத்தோடு  ஐஸ்வர்யா படங்களை இயக்குவது என கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் தங்களின் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டதால் அவர்கள் பேசி தங்களின் பெற்றோரை ஒன்றாக சேர்த்து விடுவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளனர் குடும்பத்தினர். ஆனால் ஐஸ்வர்யாவிடமும் தனுஷிடமும் அதுபோன்ற அறிகுறியே தெரியவில்லை. அத்தோடு அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா? ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவர்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

Advertisement

Advertisement

Advertisement