• Apr 20 2024

மல்லிப்பூவோடு இருக்கும் இந்தக் குழந்தை யார் தெரியுமா..? இன்னைக்கு தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டிற்று இருக்காங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாக திரைப்பிரபலங்களின் பழைய காலத்து புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் மாறியுள்ளன. அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலருடைய குழந்தை பருவ புகைப்படங்கள், அல்லது சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், விஜய், சினேகா எனப் பலரினதும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது பிரபல முன்னணி நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

தலையில் மல்லிகை பூ வைத்து அழகாக போட்டோவிற்கு போஸ் கொடுத்திருக்கும் இந்தக் குழந்தை தற்போது கோலிவுட், டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வருகின்றது.

அக்குழந்தை வேறு யாருமில்லைங்க நம்ம சமந்தா தான். குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட நடிகை சமந்தாவின் புகைப்படம் தான் அது. இதனைப் பார்த்த சமந்தா ரசிகர்கள் தற்போது அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். சமந்தா இன்று தமிழ் சினிமாவில் மட்டுமன்றி தெலுங்கிலும் பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement