• Apr 16 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிவாஷினி முதன் முதலாக யாரை சந்திப்பார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் விட்டுக் கொடுக்காமல் விளையாடி வருகின்றனர்.

இதுவரை இந்த வீட்டிலிருந்து 5 பேர் வெளியேறியுள்ள நிலையில் நேற்றைய தினம் நிஷாவினி வீட்டை விட்டு வெளியேறினார். அதாவது நாமினேஷன் லிஸ்டில் கடைசி இருவராக நிவா மற்றும் அஸீம் ஆகியோர் இருந்தனர். அப்போது அஸீம் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்து விட்டார். அதனால் நிவாஷினி தான் எலிமினேட் ஆனது உறுதியானது. 


அதன் பின் எல்லோரிடமும் விடை பெற்று நிவாஷினி வீட்டை விட்டு கிளம்பினார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து நிவா கிளம்பும்போது அவரை மற்றவர்கள் கிண்டல் செய்தனர். 'வெளியே போனதும் நேராக நீ யாரை பார்க்க போறனு தெரியும்' என ஆயிஷா கிண்டல் செய்தார்.

அவர் அசல் கோளாறு பற்றி தான் சொல்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்தது.அத்தோடு இவர்கள் இருவரும் விரைவில் சந்திப்பார்கள் என ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement