• Apr 20 2024

ஐஸ்வர்யாவிற்கு போட்டியாக அவரின் குடும்பத்திலே ஒரு ஹீரோயின் ரெடி... யார் அறிமுகம் செய்ய இருக்கார் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகியான இவரிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இதில் இவரின் நடிப்பானது பலரையும் கவர்ந்திருந்தது.


மணிரத்னம் இயக்கிய இப்படம் ஆனது மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளது. கிட்டதட்ட ரூ. 450 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்து உலகளவில் சாதனை படைத்தது. இப்படத்தில் மட்டுமன்றி நிஜத்திலும் ஐஸ்வர்யா ராய்யை 'இருவர்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் மணிரத்னம் தான்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அடுத்ததாக அவரின் மகளையும் மணிரத்னமே ஹீரோயினாக அறிமுகம் செய்து வைக்கப்போகிறார் என்பது குறித்து திரை வட்டாரத்தில் தற்போது பேச்சு ஒன்று எழுந்துள்ளது.


குறிப்பாக இவருக்கும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் ஆனது. இவர்களுக்கு பிறந்த மக்கள் தான் ஆராதியா பச்சன். ஆராதையா பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் இருந்து அடுத்த ஹீரோயின் ரெடி ஆகிவிட்டார் என்று கூறி வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். எனவே சற்றுமப் பொறுத்திருந்து பார்ப்போம் ஆராதையா நடிக்க வருகிறாரா? இல்லையா? என்பதனை.

Advertisement

Advertisement

Advertisement