நடிகர் விஜய்யின் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார். விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இப்படத்தில் இசையமைப்பாளராக தமன் கடமையாற்றியுள்ளார்.
அடுத்த வருடப் பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்
அதன்படி தளபதி 67 படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் மூணாறில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறதாம். அதுமட்டுமின்றி இதில் விஜய்யுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வும் ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நேற்றைய தினம் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது டீபியை மாற்றியுள்ளார்.அதாவது தனது ரசிகர் ஒருவர் வரைந்த ஓவியத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் டிபி-யாக வைத்துள்ளார். அந்த ஓவியம் இலங்கையை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் வரைந்த ஓவியம் ஆகும். இவர் தீவிர விஜய் ரசிகர் என்பதாகும்.
மேலும் பொதுவாக விஜய் ரசிகர்கள் மீது அதீத அன்பு வைத்திருப்பவர் . அவர் எந்த ஒரு மேடையில் பேசினாலும், என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்று தான் கூறுவார். அந்த அளவுக்கு தன்னை கொண்டாடும் ரசிகர்களை தன் மனதில் வைத்திருக்கும் விஜய் தற்போது அவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!