• Apr 20 2024

நடிகர் விஜய்க்காக நீயா நானா ஷோவில் கலந்து கொண்ட சூடான் நாட்டை சேர்ந்த ரசிகர்- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் நீயா நானா ஷோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வாரமும் வித்தியாசமான தலைப்பில் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கவரும் வகையில் நடந்தது.

 சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டன.சினிமா மட்டுமே சமூகத்தில் சமநிலையை மக்களிடம் கொண்டுவந்தது என்று நடுநிலையாக பேசப்பட்டது. கலையை ரசிக்காத சமூகம் வளர்வதற்கான சூழல் குறைவாகவே இருக்கும் என்றும் விவாதிக்கப்பட்டது. சமநிலையை விரும்பாதவர்கள் மட்டுமே சினிமாவையும் தள்ளி வைப்பார்கள் என்றும் பேசப்பட்டது.


இந்நிலையில் சூடானில் இருந்து வந்த ரசிகர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பேசினார். சினிமா எல்லோரும் ஒன்றுகூடும் ஒரு இடமாக உள்ளதாகவும் அதில் சந்தோஷமும் கொண்டாட்டமும் உள்ளதாகவும் அவர் கூறினார். தான் அதிகமான தமிழ்ப்படங்களை பார்த்துள்ளதாகவும் முதல்நாள் முதல் ஷோ பார்ப்பது பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தனக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று கூறினார். தன்னுடைய செல்போனின் பேக்கேஸில் அவர் விஜய் படத்தை வைத்துள்ளதையும் நிகழ்ச்சியில் அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பட்டையை கிளப்ப இதுவும் ஒரு காரணம். சமீபத்தில் வெளியான அவரது பீஸ்ட் மற்றும் வாரிசு படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அதிகமான வசூலை பெற்றுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement