• Apr 20 2024

ஜெய்பீம் படக்குழுவினரின் அடுத்த திட்டம்... அதுவும் சூர்யாவுடன் தானாம்... கதை என்ன தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவை பொறுத்த வரையில் எப்போதுமே உச்ச நட்சத்திரங்களுக்கு என மிகப் பெரிய ரசிகர் கூட்டமே இருப்பது வழமை. அவ்வாறாக ஏராளமான ரசிகர் கூட்டத்தைக் கொண்ட ஒரு முன்னணிக் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'ஜெய் பீம்' என்ற திரைப்படம் ஆனது ரசிகர்களிடம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. 


பிரபல இயக்குநரான த.செ ஞானவேல் இயக்கிய இந்தப் படமானது 1993 இல் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகியிருந்தது. அதாவது சந்துரு என்ற வழக்கறிஞராக சூர்யா நடித்திருந்தார். இப்படமானது நல்ல வரவேற்பை பெற்றதோடு, சில காட்சிகள் சர்ச்சையும் ஏற்படுத்தியது. 

இருப்பினும் இதையெல்லாம் கடந்து ஜெய் பீம் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே ரசிகர்களிடம் கிடைத்தன. இந்நிலையில் இப்படத்தில் இணைந்த சூர்யா - இயக்குநர் த.செ ஞானவேல் கூட்டணி மீண்டும் இணையுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமே பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.


மேலும் இந்தப்படமானது உண்மை கதையை பின்னணியாக வைத்தே உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது ஜெய் பீம் படம் போன்றே மிக முக்கியமான சம்பவத்தை கையில் எடுக்க உள்ளார்களாம் படக்குழுவினர். இதன் கதை, திரைக்கதை பணிகளை த.செ ஞானவேல் முடித்து விட்டதாகவும், அடுத்தாண்டு மார்ச் மாதம் ஷூட்டிங் நிகழ்வுகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 


இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சூர்யா - த.செ ஞானவேல் கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement