• Apr 19 2024

நள்ளிரவில் ஷாருக்கான் வீட்டில் முன் குவிந்த ரசிகர்கள்-என்ன செய்தார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் இன்று இவர் தனது 57வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக  கொண்டாடி வருகிறார்.இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

1965ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி டெல்லியில் பிறந்தவர் .இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான். 80களில் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வந்த ஷாருக்கான் 1992ல் வெளியான தீவானா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அத்தோடு  விஜய்சேதுபதி போல ஆர்ம்பத்தில் இவரும் வில்லனாக நடித்துள்ளார். பாஸிகர், தார் மற்றும் அஞ்சாம் உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து மிரட்டி உள்ளார். எனினும் அதன் பின்னர் ஹீரோவாக அவர் நடித்த படங்கள் எல்லாம் வெள்ளி விழா காண பாலிவுட்டின் முன்னணி நடிகராக மாறினார்.

இவர்  சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த வருடம் தான் அட்லி இயக்கத்தில் அடுத்த படத்தில் (ஜவான்) நடிக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் (டங்கி) ஒரு படமும் கமிட் ஆனார்.



மேலும் இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.



இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் நள்ளிரவில் கூடிய ரசிகர்களை ஷாருக்கான் சந்தித்துள்ளார்.பிறந்தநாளை ஒட்டியே அவரது வீட்டில் ரசிகர்கள் குவிந்த நிலையில் அவரது மகள் ஆபிரகாமுடன் வந்து ரசிகர்களுக்கு கை அசைத்து அவர்களை சந்தித்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement