பிரபலமான இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதாவது இவர் கன்னட திரைப்படமான 'கில்லி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர் 'தடையறத் தாக்க' என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் இவர் தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிப்படையாக பேசக்கூடிய இவர் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் செக்ஸ் பற்றிய கேள்விக்கும் பதிலளித்து இருக்கின்றார். அதாவது "நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்தாலும் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாகவே உள்ளது. பலர் அதைப் பற்றி பேசுவதை தவிர்த்துவிடுகிறார்கள். அதனாலேயே பெண்கள் பாலியல் துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது" எனத் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் "பள்ளிக் கூடங்களில் பாதுகாப்பான, ஆரோக்கியமான பாலியல் கல்வியை போதிக்க வேண்டும். அதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணங்களால் 'எச்.ஐ.வி.' போன்ற பால்வினை நோய்களுக்கு பலியாக நேரிடுகிறது" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
Listen News!