• Apr 25 2024

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகிய சாய் காயத்ரி தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸடோர்ஸ் சீரியலிற்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் இந்த சீரியலில் ஜஸ்வர்யா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் சாய் காயத்ரி.இவர் கடந்த வாரம் திடீரென ஒரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

அதாவது தான் இந்த ஜஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து இருந்தார்.


இவ்வாறுஇருக்கையில் பலரும் அந்த கதாப்பாத்திரத்திற்கு யார் வரப்போகிறார்கள் என்று கேட்டு வந்த நிலையில் அதற்கு பதில் தற்போது VJ தீபிகா ஜஸ்வர்யாவாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் சாய்காயத்திரி சீரியலில் இருந்து விலகிய பின் அவரது அம்மா உடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று கும்பிட்டு வருகின்றார்.

திருநாகேஸ்வரம் ராகு கோவில், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட இடங்களில் அவர் பூஜை செய்த வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.



Advertisement

Advertisement

Advertisement